நாளை முதல் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய பகுதிகளில் மழை

Date:

எதிர்வரும் சில நாட்களில் நாட்டின் வடகீழ் பருவமழை படிப்படியாக நிலைகொள்ளும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதன் காரணமாக, நாளை (04) முதல் நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வட-மத்திய மாகாணங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிவிப்புகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருந்து செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இன்றையதினம் (03) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும் பதுளை, மாத்தளை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா, தென் மாகாணங்களிலும் குருணாகல், அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழையின் போதான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காங்கேசந்துறையிலிருந்து மன்னார், கொழும்பு மற்றும் ஊடாக வரையான காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்குத் திசையிலிருந்து வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Popular

More like this
Related

ஜந்தர் மந்தருக்கு மீண்டும் உயிர் ஊட்டிய ராகுல் காந்தி: மோடி இல்ல வீதியை முற்றுகையிட்டுப் போராட்டம்!

யாருமே அதனை எதிர்பார்க்கவில்லை. அரசும் புலனாய்வுத் துறையினரும் கணிக்கத் தவறினார்கள். ஊடகங்களுக்கும்...

இலங்கையின் கல்வி எதிர்காலத்திற்காக கைக்கோர்க்கும் ‘சம் சம் ஃபவுண்டேஷன்’ மற்றும் ‘முஸ்லிம் ஹேண்ட்ஸ்’ அமைப்புக்கள்!

இலங்கையின் கல்வித் துறையை மேம்படுத்துவதையும், பரஸ்பர ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதையும் நோக்கமாகக்...

கல்வி மற்றும் சமூகப் பங்களிப்பிற்காக பேராசிரியர் பரீனா ருஸைக்கிற்கு ‘தமிழன்’ விருது!

அறிவை விதைத்து ஆராய்ச்சியை வளர்த்து சமூக முன்னேற்றத்தை இலக்காகக்கொண்டு உயர்கல்வித் துறையில்...

மாவனல்லை IIMT வளாகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் M.M.M. நஜீம் கடமைகளைப் பொறுப்பேற்றார்

மாவனல்லை IIMT வளாகத்தின் (IIMT Campus, Mawanella) புதிய உபவேந்தராகப் பேராசிரியர்...