பேரிடரினால் பாதிக்கப்பட்ட 85% மின் இணைப்புகள் மீட்பு!

Date:

அவசரகால பேரிடர் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட சுமார் 3.9 மில்லியன் மின்சார நுகர்வோரில், சுமார் 85% மின் இணைப்புகள் இப்போது மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் (CEB) பிரதிப் பொது முகாமையாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார்.

நேற்று (04) பேரிடர் மேலாண்மை மையத்தில் நடைபெற்ற சிறப்பு விளக்கக் கூட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நாடு முழுவதும் கிட்டத்தட்ட 7 மில்லியன் மின்சார நுகர்வோர் இருப்பதாகவும், அவர்களில் 3.9 மில்லியன் பேருக்கான மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

தற்போதைய நிலவரப்படி, இந்த நுகர்வோரில் சுமார் 85% பேருக்கு மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

 

அவசரகால பேரிடர் சூழ்நிலையில், 16,771 மின்மாற்றிகள் செயலிழந்தன, அவற்றில் 14,549 மின்மாற்றிகள் ஏற்கனவே சரிசெய்யப்பட்டு மீட்டெடுக்கப்பட்டுள்ளன.

 

மீதமுள்ள மின் மாற்றிகள் விரைவில் சரிசெய்யப்பட்டு, மின் விநியோகம் வழங்கப்படும்.

Popular

More like this
Related

வித்தியா கொலை வழக்கின் தண்டனை கைதி தற்கொலை

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை நியமிக்கப்பட்ட...

ஹஜ் யாத்திரை குறித்து பிரதி அமைச்சர் முனீர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

இம்முறை ஹஜ் யாத்திரையில் பங்கேற்கும் இலங்கை யாத்திரிகர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும்...

தென்மேற்கு பருவப்பெயர்ச்சி ஆரம்பம்: பல பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக மழை

தென்மேற்கு பருவப்பெயர்ச்சி நாடு முழுவதும் கட்டம் கட்டமாக நிலைகொண்டு வருவதால் நாட்டின்...