இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப உச்சபட்ச ஆதரவை வழங்குவோம் – மாலைத்தீவு ஜனாதிபதி உறுதி

Date:

‘டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளால் இலங்கை மக்கள் எதிர்கொண்ட பெரும் அனர்த்த நிலைமை குறித்து மாலைத்தீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்ஸு (Dr Mohamed Muizzu) தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

அத்துடன், அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமளிப்பதற்கும், இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திலும் தனது முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் மாலைத்தீவு ஜனாதிபதி அறிவித்தார்.

நேற்று (டிசம்பர் 04) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் தொலைபேசியில் உரையாடிய மாலைத்தீவு  ஜனாதிபதி, இந்த கடினமான நேரத்தில் மாலைத்தீவு அரசாங்கமும் மக்களும் இலங்கை அரசாங்கத்துடனும் மக்களுடனும் துணை இருப்பதாகவும் தெரிவித்தார்.

தமது சகோதர நாடான இலங்கையை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனிமைப்படுத்தப் போவதில்லை என்றும் கலாநிதி மொஹமட் முய்ஸு வலியுறுத்தினார்.

ஒவ்வொரு கடினமான தருணத்திலும் மாலைத்தீவு இலங்கைக்கு வழங்கும் ஆதரவைப் பாராட்டிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இந்த சந்தர்ப்பத்திலும் மாலைத்தீவுஅரசாங்கமும் மக்களும் இலங்கைக்கு வழங்கும் உள்ளார்ந்த ஆதரவு ஒரு பெரும் பலம் என்றும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

‘தொழில்நுட்ப ஜாம்பவான்கள் குறைக்கட்டும்’: சமூக வலைதளத் தடையை எதிர்க்கும் எலான் மஸ்க்கிற்கு ஸ்பெயின் பிரதமர் பதிலடி.

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் ஸ்பெயின்...

வரலாற்றில் முதன்முறையாக புதிய பெண் பஸ் நடத்துனர்களுக்கு நியமனம்

இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட 20 பஸ் நடத்துனர்களுக்கான நியமனங்களை...

எங்களுக்குத் தேவையற்ற கூடுதல் பாலின அடையாளங்கள் தேவையில்லை. ஹங்கேரி பிரதமர்.

பாலின அடையாளம் மற்றும் பாரம்பரிய குடும்ப விழுமியங்கள் குறித்த விவாதத்தில், ஹங்கேரி...

பல மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என இயற்கை...