நாட்டிலிருந்து புறப்பட்ட இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையினர்!

Date:

ஆப்ரேஷன் சாகர் பந்துவின் கீழ் தங்கள் பணியை வெற்றிகரமாக முடித்த பின்னர், இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) உறுப்பினர்கள் இன்று (05) காலை இலங்கையிலிருந்து புறப்பட்டனர்.

இலங்கை இராணுவத்துடன் ஒருங்கிணைந்து சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரிவான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இவர்கள் நாட்டிலிருந்த காலத்தில் ஆழமாக வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளைச் சென்றடைந்தனர், அத்தியாவசியப் பொருட்களை மக்களுக்கு விநியோகித்தனர், கடுமையாக வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் வசிப்பவர்களுக்கு உதவினர்,  அவசரத் தேவை ஏற்பட்டபோது முக்கியமான ஆதரவை வழங்கியதாக இலங்கை விமானப் படை தெரிவித்துள்ளது.

அவர்கள் நாட்டிலிருந்து புறப்படுவதற்கு முன், கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் தளபதி எயார் கொமடோர் அமித ஜெயமஹா, விமானப்படை அதிகாரிகளுடன் சேர்ந்து, இந்த பேரிடர் நிவாரண முயற்சியின் போது இலங்கைக்கு வழங்கப்பட்ட விலைமதிப்பற்ற ஆதரவிற்காக NDRF உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

Popular

More like this
Related

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...