இலங்கையின் அவசர நிதி கோரிக்கைக்கு சர்வதேச நாணய நிதியம் முன்னுரிமை!

Date:

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து நாடு எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிக்க, இலங்கை விடுத்த 200 மில்லியன் அமெரிக்க டொலர் விரைவான நிதி (RFI) கோரிக்கைக்கு முன்னுரிமை அளிக்க சர்வதேச நாணய நிதியம் (IMF) முடிவு செய்துள்ளது.

அவசர நிதியுதவிக்கான இலங்கை அதிகாரிகளின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, தற்போதைய சூழ்நிலையில் விரைவான நிதி கருவி (RFI) கோரிக்கையை முன்னுரிமையாக சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு பரிசீலிக்கும் என்று IMF ஒரு அறிக்கையில் அறிவித்துள்ளது.

RFI இன் கீழ் வழங்கப்படும் ஆதரவு இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி அணுகலுடன் கூடுதலாகும் என்று IMF குறிப்பிட்டது.

விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) 5 ஆவது மீளாய்வினை நிறைவு செய்வதற்கான விவாதங்களை மீண்டும் தொடங்க 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் IMF குழு இலங்கைக்கு வருகை தர உள்ளது.

மீளாய்வின் முடிவில் நாடு சுமார் 358 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெறும் என்றும் IMF குறிப்பிட்டது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...