இலங்கையின் அவசர நிதி கோரிக்கைக்கு சர்வதேச நாணய நிதியம் முன்னுரிமை!

Date:

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து நாடு எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிக்க, இலங்கை விடுத்த 200 மில்லியன் அமெரிக்க டொலர் விரைவான நிதி (RFI) கோரிக்கைக்கு முன்னுரிமை அளிக்க சர்வதேச நாணய நிதியம் (IMF) முடிவு செய்துள்ளது.

அவசர நிதியுதவிக்கான இலங்கை அதிகாரிகளின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, தற்போதைய சூழ்நிலையில் விரைவான நிதி கருவி (RFI) கோரிக்கையை முன்னுரிமையாக சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு பரிசீலிக்கும் என்று IMF ஒரு அறிக்கையில் அறிவித்துள்ளது.

RFI இன் கீழ் வழங்கப்படும் ஆதரவு இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி அணுகலுடன் கூடுதலாகும் என்று IMF குறிப்பிட்டது.

விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) 5 ஆவது மீளாய்வினை நிறைவு செய்வதற்கான விவாதங்களை மீண்டும் தொடங்க 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் IMF குழு இலங்கைக்கு வருகை தர உள்ளது.

மீளாய்வின் முடிவில் நாடு சுமார் 358 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெறும் என்றும் IMF குறிப்பிட்டது.

Popular

More like this
Related

ஹஜ் 2026: இலங்கை யாத்திரிகர்களின் நலன்களை ஆராய சவூதி சென்றடைந்தார் பிரதி அமைச்சர் முனீர் முலப்பர்!

இலங்கையின் முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் பிரதி அமைச்சரும், ஹஜ் தூதுவருமான கௌரவ...

தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகருடன் H. அப்துர் ரகீப் அவர்கள் நேரில் சந்திப்பு: இஸ்லாமிய நூல்கள் அன்பளிப்பு!

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவரும், தற்போதைய மத்திய...

மூளைக்காய்ச்சல் குறித்து பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

தெனியாய பகுதியில் உள்ள சில பாடசாலைகளில் பதிவாகியிருந்த மூளைக்காய்ச்சல் நோய், தற்போது...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு தன்சல் வழங்குவோருக்கான அறிவிப்பு!

எதிர்வரும் வெசாக் பௌர்ணமி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் நடத்துவதற்காக இதுவரையில்...