நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தின் மத்தியிலும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, 2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து டிசம்பர் மாதம் 08 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 21 இலட்சத்து 53 ஆயிரத்து 815 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 485,249 ஆகும்.
மேலும், ஜெர்மனியிலிருந்து 136,081 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 164,013 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 195,565 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 97,261 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 124,298 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 103,307 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்
அத்துடன், டிசம்பர் மாதத்தின் முதல் எட்டு நாட்களில் 50,222 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
