அனர்த்த நிவாரணத்துக்கு பங்களிப்பு செய்த கொழும்பு பெரிய பள்ளிவாசல்!

Date:

தித்வா புயல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் சுமார் 1.5 மில்லியன் ரூபா நிதியும் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான ஒரு தொகுதி உலர் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள்  கொழும்பு பெரிய பள்ளிவாசலில் வைத்து கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதியமைச்சர் முனீர் முழப்பர் கலந்து கொண்டார்.

கொழும்பு பெரிய பள்ளிவாசல் தலைவர் தாஹிர் ரஸீன் தலைமையிலான நம்பிக்கையாளர் சபையினர் பிரதியமைச்சருடன் இணைந்து இவற்றை பெற்றா பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் அஷ்ஷெய்க் மெளலவி L M லமீர் ஹாபிஸ் உள்ளிட்ட சம்மேளன அங்கத்தவர்களும் வழங்கி வைத்தனர்.

இந்நிவாரனப் பொருட்கள் குறிப்பாக அனர்த்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட வெல்லம்பிட்டி, கொலன்னாவ மக்களுக்கு பெற்றா பள்ளிவாசல்கள் சம்மேளனம் ஊடாக வழங்கப்படவுள்ளது.

தலைமையுரையை கொழும்பு பெரிய பள்ளிவாசல் தலைவர் தாஹிர் ரஸீன் நிகழ்த்தியதுடன் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதி பணிப்பாளர் அலா அஹமட், சமய மற்றும் கலாசார விவகாரங்களுக்கான பிரதியமைச்சர் முனீர் முழப்பர் ஆகியோர் உரையாற்றினர்.

இந்நிகழ்வில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள், உலமாக்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள ஏனைய அதிகாரிகள், முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...

சிறுவர்களுக்கான அன்றாட துஆக்கள் மற்றும் ஒழுக்கங்கள்: மும்மொழிகளில் புதிய நூல் வெளியீடு!

பிள்ளைகள் அன்றாட வாழ்வில் ஓத வேண்டிய துஆக்கள் மற்றும் அவர்கள் கடைப்பிடிக்க...

இந்தியப் பெருங்கடலில் பாகிஸ்தான் கடற்படையின் அதிரடி மீட்பு நடவடிக்கை: இலங்கை பிரஜை மீட்பு.

மனிதாபிமான அடிப்படையிலும், கடலில் ஆபத்தில் இருப்பவர்களைக் காக்கும் கடமையுணர்வோடும் பாகிஸ்தான் கடற்படை...