ஹமாஸின் மூத்த தளபதி ரேத் சயீத் காசாவில் படுகொலை!

Date:

காசாவில் ஹமாஸின் மூத்த தளபதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹமாஸின் மூத்த தளபதி ரேத் சயீத் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த விடயத்தை இஸ்ரேலிய படைகள் தெரிவித்துள்ளன.

காசா நகரில் ஒரு கார் மீது நடத்திய தாக்குதலின் போது அவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் குறைந்தது 25 பேர் காயமடைந்ததாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு மூத்த ஹமாஸ் தளபதியை குறிவைத்ததில் இது மிக உயர்ந்த படுகொலையாக இருக்கும் என்று கருதப்படுகின்றது.

சயீத் ஹமாஸின் ஆயுத உற்பத்திப் படையின் தலைவர் என்று இஸ்ரேலிய தரப்புக்கள் தெரிவித்துள்ளன. ஹமாஸின் காசா நகர படைகளுக்கு சயீத்தே தலைமை தாங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய மாதங்களில், ஹமாஸின் இராணுவப் பிரிவில் ரேத் சயீத் ஒரு முன்னணிப் பங்கைக் கொண்டிருந்தார், போர் நிறுத்தக் காலத்தில் காசா பகுதியில் தொடர்ந்து ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்படுவதையும் அவர் மேற்பார்வையிட்டார்.

Popular

More like this
Related

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...

சிறுவர்களுக்கான அன்றாட துஆக்கள் மற்றும் ஒழுக்கங்கள்: மும்மொழிகளில் புதிய நூல் வெளியீடு!

பிள்ளைகள் அன்றாட வாழ்வில் ஓத வேண்டிய துஆக்கள் மற்றும் அவர்கள் கடைப்பிடிக்க...

இந்தியப் பெருங்கடலில் பாகிஸ்தான் கடற்படையின் அதிரடி மீட்பு நடவடிக்கை: இலங்கை பிரஜை மீட்பு.

மனிதாபிமான அடிப்படையிலும், கடலில் ஆபத்தில் இருப்பவர்களைக் காக்கும் கடமையுணர்வோடும் பாகிஸ்தான் கடற்படை...

6 ஆம் தரத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட எந்தவொரு பாடத்தொகுதிகளும் நீக்கப்படவில்லை: பிரதமர்

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் 6 ஆம் தரத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட எந்தவொரு...