சிப் அபகஸ் புத்தளம் கிளையைச் சேர்ந்த மாணவர்கள் 52 விருதுகளைத் தம் வசப்படுத்திக் கொண்டனர்.

Date:

-எம்.யூ.எம்.சனூன்

கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் அண்மையில் (14) நடைபெற்ற அகில இலங்கை சிப் அபகஸ் தேசிய ப்ராடிஜி போட்டியில் சிப் அபகஸ் புத்தளம் கிளையைச் சேர்ந்த மாணவர்கள் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தி, 52 விருதுகளைத் தம் வசப்படுத்திக் கொண்டனர்.

இந்த சிப் அபகஸ் தேசிய ப்ராடிஜி போட்டியில் இலங்கை முழுவதிலிருந்தும் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றிருந்தனர்.

இந்த நிகழ்வை நாடாளுமன்ற துணை சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சாலிஹ் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்வில் புத்தளம் கிளையின் நிர்வாக இயக்குனர் செயித் அப்கர் தலைமையிலான சிப் அபகஸ் மாணவர்கள் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தி இந்த அடைவை பெற்றுள்ளனர்.

புத்தளம் கிளை மாணவர்களின் சாதனைகளுக்கான அங்கீகாரத்தை, துணை சபாநாயகரும் குழுக்களின் தலைவருமான டாக்டர் ரிஸ்வி சாலிஹ் அவர்கள், சிப் அபகஸ் புத்தளம் கிளை நிர்வாக இயக்குனர் சையத் அப்கர் முகமது மில்ஹான் அவர்களுக்கு வழங்கி வைத்தார்.

இந்த அங்கீகாரமானது போட்டியில் பங்கேற்ற மாணவர்களின் அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் சிறப்பை எடுத்துக்காட்டியமை குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.

Popular

More like this
Related

அமைதிப்பேச்சு: பாகிஸ்தான் சென்றார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்: பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு.

ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள பாகிஸ்தான் வந்த அமெரிக்க துணை...

வாகனங்களுக்கான எரிபொருள் QR முறைமை நீக்கம்?

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி...

ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு பெறும் ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகர் மௌபியா அவர்களுக்கு கஹட்டோவிட்டவில் கௌரவிப்பு!

கம்பஹா மற்றும் மினுவாங்கொட கல்வி வலயங்களில் நீண்டகாலமாக ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகராகப்...

தமிழ்- சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு!

நாட்டின் பொதுமக்களின் மிக முக்கியமான பாரம்பரிய விழாவான சித்திரை புத்தாண்டு காலத்தில்...