நாடளாவிய ரீதியில் 3 நாள் டெங்கு ஒழிப்பு திட்டம்.

Date:

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தலைமையில் உள்ளூராட்சி நிறுவனங்களால் சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மற்றும் இலங்கை பொலிஸ், சூழல் பாதுகாப்புப் பிரிவு, கல்வி, பாதுகாப்பு மற்றும் சுற்றாடல் அமைச்சுக்களின் கூட்டு பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் “நிகசல புபுரயக் – சுவபர திவியக்” அனர்த்தத்திற்கு பின்னரான தூய்மைப்படுத்தல் மற்றும் டெங்கு கட்டுப்பாட்டு மூன்று நாள் தேசிய திட்டம், இன்று (07) முதல் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை, நாடு முழுவதும் 03 நாட்களுக்கு செயல்படுத்தப்படும்.

மழைக்காலம் காரணமாக டெங்கு பரவும் அபாயம் இருப்பதால், இந்த விசேட தேசிய திட்டம் இந்த வாரம் புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நாடு முழுவதையும் உள்ளடக்கியதாக செயல்படுத்தப்படும்.

அதன்படி, இந்த திட்டம் பின்வருமாறு செயல்படுத்தப்படும்.

• 2026/01/07 – சமூக அளவிலான டெங்கு கட்டுப்பாட்டு திட்டம்

• 2026/01/08 – கல்வித் துறையை உள்ளடக்கிய நிறுவனங்களுக்கான டெங்கு கட்டுப்பாட்டு திட்டம்

• 2026/01/09 – அரச மற்றும் தனியார் துறைகளை உள்ளடக்கிய டெங்கு கட்டுப்பாட்டு திட்டம்

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...