தோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது

Date:

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான உத்தியோகபூர்வ ஒப்பந்தம், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சுக்கும் இலங்கை பெருந்தோட்ட உரிமையாளர்கள் சங்கத்திற்கும் (Sri Lanka Planters’ Association) இடையில் இன்று (30) கையெழுத்திடப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் இலங்கை பெருந்தோட்ட உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுனில் பொஹொலியத்த ஆகியோர் இந்த ஒப்பந்தத்தை பரிமாறிக்கொண்டனர்.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை தினசரி சம்பளம் 1,350 ரூபாவிலிருந்து 1,550 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மேலதிகமாக 200 ரூபா வரவு ஊக்குவிப்புக் கொடுப்பனவாக (Attendance Allowance) வழங்கப்படவுள்ளது.

இதற்கிடையில், 2026 வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்த ஜனாதிபதி, தோட்டத் தொழிலாளர்களின் தினசரிச் சம்பளத்தை 1,750 ரூபா வரை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை அறிவித்திருந்தார். இதற்கமைவாக, இந்தச் சம்பள உயர்வுக்கான செலவுகளை ஈடுகட்ட 2026 வரவு செலவுத் திட்டத்தில் 5,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை!

நீர்ப்பாசனத் துறை இயக்குநர், நீர் மேலாண்மைப் பொறியாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹெரத், தனது...

HIV மற்றும் பாலியல் சார் நோய்களைக் கண்டறிய விசேட ‘நடமாடும் முகாம்கள்’!

எச்.ஐ.வி, கல்லீரல் அழற்சி (Hepatitis) மற்றும் பாலியல் சார் நோய்களை முன்கூட்டியே...

ஜூலை 13: கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையை விட்டு வெளியேறி நான்கு ஆண்டுகள் – ஒரு பார்வை

இலங்கையின் மிகவும் சக்திவாய்ந்த நிறைவேற்று ஜனாதிபதிகளில் ஒருவரான  கோட்டாபய ராஜபக்ஷவை 2022,...

முன்பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு பாதுகாப்பான ஆடைகளை அணிவிக்குமாறு வேண்டுகோள்!

டெங்கு அச்சுறுத்தல் நிலவும் சூழலில், டெங்கு நுளம்புகளிடமிருந்து பாதுகாப்பதற்காக, தங்கள் கைகளையும்...