இஸ்ரேலிலுள்ள இலங்கையர்களுக்கு அறிவித்தல்

Date:

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் அனைவரும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண பாதுகாப்புச் சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, மிகுந்த அவதானத்துடன்செயற்படுமாறு இஸ்ரேலிலுள்ள இலங்கைத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் எந்தவொரு வளர்ந்து வரும் அச்சுறுத்தலையும் கட்டுப்படுத்தத் தயாராக இருப்பதாகவும், இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு தொடர்ந்தும் தகவல் மற்றும் ஆலோசனைகளைப் புதுப்பிக்கும் என்றும் இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார, சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏவுகணைத் தாக்குதல்கள் போன்ற அவசர நிலைகள் ஏற்பட்டால், அது குறித்த தகவல்கள் உடனுக்குடன் உங்களது ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி அனுப்பி வைக்கப்படும் எனவும், அபாய எச்சரிக்கை சத்தம் கேட்டால், உடனடியாக அருகிலுள்ள பாதுகாப்பு அறைகளுக்குச் சென்று தஞ்சம் அடையுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு,இன்று சனிக்கிழமை (31) காலை 10 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை தூதரகம் திறந்திருக்கும் என்றும், இந்த நேரத்தில் வழக்கமான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

காசாவில் மீண்டும் உயிர்பெற்ற பல்கலைக்கழகக் கல்வி: நீண்ட இடைவேளைக்குப் பின் கூடார வகுப்பறைகளுக்குத் திரும்பிய காசா மாணவர்கள்.

போரினால் நீண்டகாலமாக முடக்கப்பட்டிருந்த உயர்கல்விச் செயற்பாடுகளை மீண்டும் தொடங்கும் நோக்கில், தெற்கு...

இன நல்லிணக்கத்தை நோக்கிய பயணம்: நிதா அறக்கட்டளையின் விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி!

நாட்டில் இனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வையும், மத நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பும் நோக்கில், நிதா...

பெலாரஸில் அதிரடி: தன்பாலின ஈர்ப்பை ஆதரிப்பது இனி கிரிமினல் குற்றம்!

பெலாரஸ் நாட்டில் தன்பாலின ஈர்ப்பு மற்றும் LGBTQ+ சமூகத்தினருக்கு ஆதரவாகப் பேசுவது...

இலங்கைக்கான எண்ணெய், சுற்றுலா ஆதரவை மீண்டும் உறுதிபடுத்திய ரஷ்யா!

வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்துக்கும், இலங்கை வந்துள்ள ரஷ்யாவின் பிரதி வெளிவிவகார...