கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் ‘காஷ்மீர் ஒற்றுமை தினம்’ அனுஷ்டிப்பு

Date:

கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் காஷ்மீர் ஒற்றுமை தினத்தை முன்னிட்டு கருத்தரங்கு மற்றும் புகைப்படக் கண்காட்சியொன்று நேற்று (05) நடைபெற்றது.

இந்நிகழ்வு காஷ்மீர் மக்களுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவை வெளிப்படுத்தியதுடன், ஜம்மு-காஷ்மீர் பிரச்சினைக்கு அமைதியான மற்றும் நீதியான தீர்வின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியது.

இந்நிகழ்வில் பாகிஸ்தான் சமூகத்தினர், காஷ்மீரின் நண்பர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.

பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர் ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பஹீம்-உல்-அசீஸின் உரையுடன் கருத்தரங்கு நிறைவடைந்தது. ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானின் கொள்கை ரீதியான நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திய அவர், இது தொடர்பாக நீடித்த சர்வதேச ஈடுபாட்டின் அவசியத்தை எடுத்துக் காட்டினார்.

இந்தியாவினால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் (IIOJK) நிலைமை பல தசாப்தங்களாக கவலைக்குரிய விடயமாக இருந்து வருவதைக் குறிப்பிட்ட அவர், அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் மனித உரிமைகளை மதிப்பதில் சர்வதேச சமூகம், குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை தனது பங்கை ஆற்றுமாறு அழைப்பு விடுத்தார்.

ஜம்மு-காஷ்மீர் பிரச்சினை சர்வதேச சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தொடர்புடைய தீர்மானங்களின்படி தீர்க்கப்பட வேண்டும் என்று உயர் ஸ்தானிகர் வலியுறுத்தினார். நீடித்த பதற்றம் பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு விரிவான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.

 

இந்நிகழ்வில் ஷிராஸ் யூனுஸ் மற்றும் திருமதி. சூரியா ரிஸ்வி ஆகியோர் முக்கிய உரையாற்றினர்.

அவர்கள் பேச்சுவார்த்தை, மதங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மற்றும் அமைதியான சகவாழ்வின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர். மேலும், மனிதாபிமான கவலைகள் குறித்து கவனம் செலுத்திய அவர்கள், அப்பகுதியில் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தினர்.

காஷ்மீர் ஒற்றுமை தினத்தை முன்னிட்டு பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பிரதமர் விடுத்த செய்திகளை முறையே ஊடக அதிகாரி மற்றும் வர்த்தக மற்றும் முதலீட்டு அதிகாரி ஆகியோர் வாசித்தனர்.

உயர் ஸ்தானிகர் தனது நிறைவுரையில், ஆக்கப்பூர்வமான பங்களிப்புகளை வழங்கிய முக்கிய பேச்சாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாகிஸ்தான் சமூகத்தினர், காஷ்மீரின் நண்பர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.

பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர் ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பஹீம்-உல்-அசீஸின் உரையுடன் கருத்தரங்கு நிறைவடைந்தது. ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானின் கொள்கை ரீதியான நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திய அவர், இது தொடர்பாக நீடித்த சர்வதேச ஈடுபாட்டின் அவசியத்தை எடுத்துக் காட்டினார்.

இந்தியாவினால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் (IIOJK) நிலைமை பல தசாப்தங்களாக கவலைக்குரிய விடயமாக இருந்து வருவதைக் குறிப்பிட்ட அவர், அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் மனித உரிமைகளை மதிப்பதில் சர்வதேச சமூகம், குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை தனது பங்கை ஆற்றுமாறு அழைப்பு விடுத்தார்.

ஜம்மு-காஷ்மீர் பிரச்சினை சர்வதேச சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தொடர்புடைய தீர்மானங்களின்படி தீர்க்கப்பட வேண்டும் என்று உயர் ஸ்தானிகர் வலியுறுத்தினார். நீடித்த பதற்றம் பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு விரிவான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.

இந்நிகழ்வில் ஷிராஸ் யூனுஸ் மற்றும் திருமதி. சூரியா ரிஸ்வி ஆகியோர் முக்கிய உரையாற்றினர்.

அவர்கள் பேச்சுவார்த்தை, மதங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மற்றும் அமைதியான சகவாழ்வின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர். மேலும், மனிதாபிமான கவலைகள் குறித்து கவனம் செலுத்திய அவர்கள், அப்பகுதியில் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தினர்.

காஷ்மீர் ஒற்றுமை தினத்தை முன்னிட்டு பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பிரதமர் விடுத்த செய்திகளை முறையே ஊடக அதிகாரி மற்றும் வர்த்தக மற்றும் முதலீட்டு அதிகாரி ஆகியோர் வாசித்தனர்.

உயர் ஸ்தானிகர் தனது நிறைவுரையில், ஆக்கப்பூர்வமான பங்களிப்புகளை வழங்கிய முக்கிய பேச்சாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

எங்களுக்குத் தேவையற்ற கூடுதல் பாலின அடையாளங்கள் தேவையில்லை. ஹங்கேரி பிரதமர்.

பாலின அடையாளம் மற்றும் பாரம்பரிய குடும்ப விழுமியங்கள் குறித்த விவாதத்தில், ஹங்கேரி...

பல மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என இயற்கை...

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை மேலதிக வகுப்புகளுக்கு தடை

2025ம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 17ம் திகதி...

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தால் 1.9 பில்லியன் ரூபா ஒதுக்கீடு!

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி...