இந்தியா – பாகிஸ்தான் போட்டி: இலங்கையில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

Date:

கொழும்பில் எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்தியா – பாகிஸ்தான் 20/ 20 கிரிக்கெட் போட்டிக்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று (10) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த போட்டியில் கலந்துகொள்ளப்போவதில்லை எனப் பாகிஸ்தான் அரசாங்கம் முன்னர் எடுத்திருந்த முடிவை, இலங்கையின் தலையீட்டின் பின்னர் மாற்றிக்கொண்டமை குறித்து அரசாங்கம் என்ற வகையில் பாராட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிராந்திய நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை வளர்ப்பதில் கிரிக்கெட் விளையாட்டைப் பயன்படுத்தி, நாடுகளுக்கிடையில் நட்புறவையும் ஒத்துழைப்பையும் கட்டியெழுப்புவதற்கு ஒரு நாடாக இலங்கைக்குச் சந்தர்ப்பம் கிடைக்குமாயின், அரசாங்கம் என்ற வகையில் அந்தத் தலையீட்டைத் தயங்காமல் நிறைவேற்றத் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...