இந்தியா – பாகிஸ்தான் போட்டி: இலங்கையில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

Date:

கொழும்பில் எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்தியா – பாகிஸ்தான் 20/ 20 கிரிக்கெட் போட்டிக்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று (10) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த போட்டியில் கலந்துகொள்ளப்போவதில்லை எனப் பாகிஸ்தான் அரசாங்கம் முன்னர் எடுத்திருந்த முடிவை, இலங்கையின் தலையீட்டின் பின்னர் மாற்றிக்கொண்டமை குறித்து அரசாங்கம் என்ற வகையில் பாராட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிராந்திய நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை வளர்ப்பதில் கிரிக்கெட் விளையாட்டைப் பயன்படுத்தி, நாடுகளுக்கிடையில் நட்புறவையும் ஒத்துழைப்பையும் கட்டியெழுப்புவதற்கு ஒரு நாடாக இலங்கைக்குச் சந்தர்ப்பம் கிடைக்குமாயின், அரசாங்கம் என்ற வகையில் அந்தத் தலையீட்டைத் தயங்காமல் நிறைவேற்றத் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

அரசாங்க அச்சுத் திணைக்களத்தில் தமிழ் மொழிபெயர்ப்பாளர் தட்டுப்பாடு: தமிழ், முஸ்லிம் விண்ணப்பதாரர்கள் பாதிப்பு!

அரசாங்க அச்சுத் திணைக்களத்தில் தமிழ் மொழிபெயர்ப்பாளர்களின் பற்றாக்குறை நிலவுவதால், நாளாந்தம் வெளியிடப்படும்...

விசேட தேவையுடையோருக்கு புதிய பஸ்கள் இறக்குமதி

‘கிளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியைப்...

ஊழலில் வீழ்ச்சி கண்டு வரும் இலங்கை

Transparency International ஊடாக வெளியிடப்பட்டுள்ள 2025 ஊழல் குறிகாட்டி பட்டியலில் (CPI) ...

NewsNow தலைமை ஆசிரியர் ஃபியாஸ் முஹம்மது பிரியாவிடை: பஹன மீடியா நிறுவனத்தில் பாராட்டு விழா!

NewsNow செய்தித் தளத்தின் தலைமை ஆசிரியராகவும், பஹன மீடியா (Pahana Media)...