சவூதி அரேபியாவில் ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டுள்ளதாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் மற்றும் மத விவகார அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பிறை தென்பட்டதை அடுத்து, சவூதி அரேபியாவில் நாளை (18, புதன்கிழமை) முதல் புனித ரமழான் நோன்பு ஆரம்பமாகிறது.
இன்று இரவு இஷா தொழுகையைத் தொடர்ந்து, சவூதி அரேபியாவின் அனைத்துப் பள்ளிகளிலும் ரமழான் மாதத்திற்கான சிறப்பு ‘தராவீஹ்’ தொழுகைகள் நடைபெறும்.
இலங்கையைப் பொறுத்தவரை, ரமழான் பிறை குறித்து நாளை (புதன்கிழமை) இரவு கொழும்பு பெரிய பள்ளிவாசல் மற்றும் பிறைக் குழு கூடி இறுதி முடிவை அறிவிக்கும்.
புனித ரமழான் மாதத்தை வரவேற்கும் விதமாக உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியப் பெருமக்கள் உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர்.
