இலங்கைக்கு கடத்த இருந்த 30 கிலோ மூக்குபொடி பொதிகள் பறிமுதல் | மண்டபம் சுங்கத்துறை நடவடிக்கை

Date:

தமிழகத்தின் மண்டபம் அருகே உள்ள வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கள்ளத்தோணியில் கடத்த இருந்த 30 கிலோ மூக்குப் பொடி பொதிகள் மண்டபம் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள வேதாளை குயவன் தோப்பு பகுதியில் இருந்து இலங்கைக்கு மூக்கு பொடி பண்டல்கள் கடத்த இருப்பதாக ராமேஸ்வரம் சுங்கத்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சுங்கத்துறை அதிகாரிகளால் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த பிரதேசத்தின் கடற்கரையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த நாட்டுப்படகு ஒன்றை சோதனை செய்ய முற்பட்டபோது கடத்தல் காரர்கள் இரண்டு பண்டல்களை கடற்கரையில் தூக்கி வீசி விட்டு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பொதிகள் இரண்டிரும் 100 அட்டைபெட்டிகளில் சுமார் 30 கிலோ மூக்கு பொடிகள் காணப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். குறிதத் கடத்தல்காரர்கள் தொடர்பாக விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுத்தள்ளனர்.

Popular

More like this
Related

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...

2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!

இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி...

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை

இன்றையதினம் (04) நாட்டின் சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை...

தலைமுறை அடிப்படையில் புகையிலைக்கு தடை விதித்த மாலைதீவு

மாலைதீவு நாட்டில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி...