இலங்கைக்கு கடத்த இருந்த 30 கிலோ மூக்குபொடி பொதிகள் பறிமுதல் | மண்டபம் சுங்கத்துறை நடவடிக்கை

Date:

தமிழகத்தின் மண்டபம் அருகே உள்ள வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கள்ளத்தோணியில் கடத்த இருந்த 30 கிலோ மூக்குப் பொடி பொதிகள் மண்டபம் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள வேதாளை குயவன் தோப்பு பகுதியில் இருந்து இலங்கைக்கு மூக்கு பொடி பண்டல்கள் கடத்த இருப்பதாக ராமேஸ்வரம் சுங்கத்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சுங்கத்துறை அதிகாரிகளால் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த பிரதேசத்தின் கடற்கரையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த நாட்டுப்படகு ஒன்றை சோதனை செய்ய முற்பட்டபோது கடத்தல் காரர்கள் இரண்டு பண்டல்களை கடற்கரையில் தூக்கி வீசி விட்டு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பொதிகள் இரண்டிரும் 100 அட்டைபெட்டிகளில் சுமார் 30 கிலோ மூக்கு பொடிகள் காணப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். குறிதத் கடத்தல்காரர்கள் தொடர்பாக விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுத்தள்ளனர்.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...