கிளிநொச்சி விளாவோடை பகுதியில் யானைகள் அட்டகாசம் | அச்சத்தில் மக்கள்

Date:

கிளிநொச்சி விளாவோடை பகுதியில் யானைகள் அட்டகாசம் புரிவதாகவும், அதனால் தாம் அச்சத்தில் உள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட விளாவோடை பகுதியில் இவ்வாறு யானைகள் அட்டகாசம் புரிந்துள்ளன.
அக்கிராமத்தில் பாரிய அளவில் விவசாயத்தயே தமது தொழிலாக கொண்டுள்ளனர்.
தற்போது யானைகள் அங்கு வர ஆரம்பித்துள்ளன எனவும் இதுவரை காலமும் வராத யானனைகள் எவ்வாறு திடீரென வந்தது எனவும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் அடர்ந்த காடுகளும் இல்லாத நிலையில் எவ்வாறு இந்த யானைகள் வந்தன எனவும் தமது பயிர் நிலங்களையும்,தென்னைமரங்களையும் சேதப்படுத்தி சென்றுள்ளதாகவும் மக்கள் கவலை தெரிித்துள்ளனர்.
உரிய விடயம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களமும், சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் நடவடிக்கை மேற்கொண்டு, தமது வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி தருமாறு மக்களால் குாரிக்கை முன்வைக்கப்படுகின்றது.
கிளிநொச்சி நிருபர்
சப்த சங்கரி

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...