சிரியாவில் இஸ்ரேல் மீண்டும் ரொக்கெட் தாக்குதல்

Date:

சிரியா மீது இஸ்ரேல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீசிய ரொக்கெட் குண்டுகள் தலைநகர் டமஸ்கஸின் தென் பகுதியில் விழுந்ததாக சிரிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

ஈரானுடன் தொடர்புபட்ட சொத்துகளை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக உளவுத் தகவல்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

கோலன் குன்று பகுதியில் இருந்து இந்தத் தாக்குதல் இடம்பெற்றதோடு பெரும்பாலான ஏவுகணைகளை சுட்டுவீழ்த்த முடிந்ததாக சிரிய இராணுவம் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைநகரின் புறநகர் பகுதி மீது ஒரு மாதத்திற்குள் இடம்பெறும் இரண்டாவது தாக்குதலாக இது உள்ளது.

இந்த செய்தி பற்றி கருத்து வெளியிடுவதை இஸ்ரேல் இராணுவம் மறுத்துள்ளது.

சிரியாவில் இஸ்ரேல் தனது இலக்குகளை கடந்த ஒர் ஆண்டில் விரிவுபடுத்தி உள்ளது. அங்கு ஈரான் பலம்பெற்றிருக்கும் ஈராக் எல்லையை ஒட்டிய தூர கிழக்கு பகுதியிலும் இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மாலைதீவில் பணியை தமது ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...