வைத்தியர் வீட்டில் அட்டகாசம் செய்த மர்மநபர்கள்!

Date:

வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் வசிக்கும் வைத்தியர் ஒருவரது வீட்டிற்குள் புகுந்த இனம் தெரியாத நபர்கள் வைத்தியரையும் அவரது மனைவியையும் தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்றயதினம் இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் நேற்றயதினம் இரவு குறித்த வைத்தியரின் வீட்டிற்குள் இரும்பு கம்பிகளுடன் நுளைந்த நான்குநபர்கள் வைத்தியரையும் அவரது மனைவியையும் தாக்கிவிட்டு, அவரதுஇரண்டு தொலைபேசிகள், மோட்டார்சைக்கிள்திறப்பு, மற்றும் சிறுதொகை பணத்தினையும் எடுத்துசென்றுள்ளதுடன் ரகசிய கண்காணிப்பு கமராவின் சேமிப்பகத்தையும் தூக்கிச்சென்றுள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த வைத்தியர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சம்பவம் தொடர்பில் வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
வவுனியா துவாரகன்

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...