மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் சுகாதார நடைமுறைகளுடன் சிறப்பாக இடம் பெற்ற  சிவராத்திரி நிகழ்வு.

Date:

வரலாற்று  சிறப்பு மிக்க    மன்னார்  திருக்கேதீஸ்வர ஆலயத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான மகா சிவராத்திரி நிகழ்வு நேற்று  வியாழக்கிழமை(11) இடம் பெற்றது. இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
-நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து செல்லும் நிலையில் சுகாதார நடை முறைகளுக்கு அமைவாக மஹா சிவராத்திரி நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றது.
-பொலிஸார்,இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புகளுக்கு மத்தியில் கடுமையான சுகாதார நடை முறைகளுடன் சிவராத்திரி நிகழ்வுகள் இடம் பெற்று வருவதோடு,  ஆறு ஜாம பூஜைகளும் இடம் பெற்று  வருகின்றது.
அதே நேரத்தில் இராணுவம் பொலிஸ் மற்றும் விசேட அதிரடி படையினரின் கண்கானிப்பின் கீழ் மஹா சிவராத்திரி பூஜைகள் இடம் பெற்று வருகின்றது.
பாலாவி தீர்த்த கரையில் நீராடுவதும் தீர்த்தம் எடுத்து செல்வதும் பாதுகாப்பு காரணங்களால் தடை செய்யப்பட்டுள்ளது.
சிவராத்திரி நிகழ்வுகளை முன்னிட்டு திருக்கேதீஸ்வர திருப்பணி சபையின் ஏற்பாட்டில் பல்வேறுபட்ட இந்து கலாச்சார நிகழ்வுகள் அறநெறி சொற்பொழிவு நிகழ்வுகளும் இடம் பெற்று வருகின்றது.
-சுகாதார துறையினர் கொரோனா தொடர்பில் சுகாதார நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(மன்னார் நிருபர்)

Popular

More like this
Related

உலக அமைதி தினம்: உலக பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் சவூதி அரேபியாவின் முயற்சிகள்

எழுத்து: கலித் ஹமூத் அல்-கஹ்தானி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அமைதி மதிப்புகளுக்கான...

‘உலக மக்கள் காசா பக்கம் நிற்கும் வரை இஸ்ரேல்-அமெரிக்காவின் சதி நிறைவேறாது”: இஸ்ரேலுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற பேரணி!

சென்னையில் காசாவில் நிலவும் போரினை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, பெரியாரிய உணர்வாளர்கள்...

2025(2026)சாதாரண பரீட்சைக்கான ONLINE விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

2025(2026) ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரணதர பரீட்சைககு தோற்றுவதற்கான நிகழ்நிலை விண்ணப்பங்கள்...

இலங்கையில் அதிகரித்துள்ள இணையவழி துஷ்பிரயோகம்!

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும்...