வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் சிலர் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

Date:

வடக்கில் இருவேறு கடற்பகுதியில் இன்று அதிகாலை 34 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இதன்படி மன்னார் கடற்பரப்பில் 20 மீனவர்கள் இன்று 25 வியாழக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பயணித்த இரண்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதேபோல யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து மேலும் 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்கள் பயணித்த ஒரு படகு பறிமுதல் செய்யப்பட்டது.

Popular

More like this
Related

இலங்கை தமிழ் இளைஞருக்கு சவூதியில் சிறைத்தண்டனை விவகாரம்: விரிசல்களை வளரவிடாது இன நல்லிணக்கத்தை பாதுகாப்பது முக்கியம்

சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த இலங்கையைச் சேர்ந்த அனோஜன் என்ற இளைஞருக்கு,...

மெக்குவாரி வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி ஷெமாரா விக்ரமநாயக்க ஓய்வு

ஆஸ்திரேலியாவின் முன்னணி நிதிச் சேவை நிறுவனமான 'மெக்குவாரி குரூப்' (Macquarie Group)...

ராஷித் அல்-கன்னூசியின் உடல்நிலை குறித்து சர்வதேச முஸ்லிம் உலமாக்கள் ஒன்றியம் கவலை: துனிசிய அரசிற்கு கோரிக்கை!

துனிசியாவின் மூத்த அரசியல் தலைவரும், பிரபல இஸ்லாமிய அறிஞருமான ஷேக் ராஷித்...

முதலீட்டாளர் நம்பிக்கையில் இலங்கை முன்னேற்றம்

முதலீட்டாளர் உறவுகள் மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை தொடர்பில் வேகமாக முன்னேறி வரும்...