வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கு பாகிஸ்தான் விடுத்துள்ள அழைப்பு

Date:

பாகிஸ்தானின் தேசிய தினம் எதிர்வரும் 23 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில், குறித்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறு, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் Muhammad Saad Khattak மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன ஆகியோருக்கு இடையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாக, வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இருதரப்பு உறவுகளை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பிலும் இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக, வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானினால் உறுதியளிக்கப்பட்ட திட்டங்களான, நடமாடும் நூலகங்களை அமைத்தல் மற்றும் இலங்கை மாணவர்களுக்கு நூறு மருத்துவ புலமைப்பரிசில்களை மேலதிகமாக வழங்குதல் உள்ளிட்ட திட்டங்களை விரைவாக முன்னெடுக்கவும், இதன்போது இணக்கம் காணப்பட்டுள்ளது.

மேலும், இரு நாடுகளுக்கிடையிலான சுற்றுலாத் துறையினை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் என, வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு பெருமை சேர்த்த ருமேஷ் தரங்க!

2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இலங்கையின் 23 வயதான ருமேஷ் தரங்க...

யாழ்ப்பாணம் மற்றும் கண்டி வரை மெட்ரோ பேருந்து!

எதிர்வரும் நாட்களில் புதிய மெட்ரோ பேருந்துகள் சேவையில் இணைக்கப்படவுள்ளதுடன், ஆண்டின் இறுதிக்குள்...

புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு சலீம் ஆசிரியரை தலைவராகக் கொண்ட புதிய நிர்வாக சபை தெரிவு.

நேற்று புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கான புதிய நிர்வாக சபை தெரிவுக்குரிய நிகழ்வுகள்...

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப் புள்ளிகள் வெளியீடு!

2025 க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகங்களில் உள்ள ஒவ்வொரு...