சிரியாவில் இஸ்ரேல் மீண்டும் ரொக்கெட் தாக்குதல்

Date:

சிரியா மீது இஸ்ரேல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீசிய ரொக்கெட் குண்டுகள் தலைநகர் டமஸ்கஸின் தென் பகுதியில் விழுந்ததாக சிரிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

ஈரானுடன் தொடர்புபட்ட சொத்துகளை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக உளவுத் தகவல்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

கோலன் குன்று பகுதியில் இருந்து இந்தத் தாக்குதல் இடம்பெற்றதோடு பெரும்பாலான ஏவுகணைகளை சுட்டுவீழ்த்த முடிந்ததாக சிரிய இராணுவம் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைநகரின் புறநகர் பகுதி மீது ஒரு மாதத்திற்குள் இடம்பெறும் இரண்டாவது தாக்குதலாக இது உள்ளது.

இந்த செய்தி பற்றி கருத்து வெளியிடுவதை இஸ்ரேல் இராணுவம் மறுத்துள்ளது.

சிரியாவில் இஸ்ரேல் தனது இலக்குகளை கடந்த ஒர் ஆண்டில் விரிவுபடுத்தி உள்ளது. அங்கு ஈரான் பலம்பெற்றிருக்கும் ஈராக் எல்லையை ஒட்டிய தூர கிழக்கு பகுதியிலும் இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...