உடனடியாக பயணத் தடைகளை விதியுங்கள் – விளைவு விபரீதமாகும்! | பிரதான மருத்துவ சங்கங்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

Date:

நாடு முழுவதும் ஏற்பட்டு வரும் கொரோனா வைரஸ் பரவலை அடிப்படையாக கொண்டு கடும் பயண தடைகளை உடனடியாக விதிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், வரும் காலத்தில் மாபெரும் தேசிய அனர்த்தம் ஏற்படும் என இலங்கையில் உள்ள பிரதான மருத்துவ சங்கங்கள் இணைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளன.

தற்போதைய நிலைமையில் அடுத்த சில வாரங்களில் மற்றும் அதற்கு பின்னரும் கொரோனா மரணங்கள் பெருமளவில் அதிகரிக்கலாம் எனவும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நோய் பரவலை உடனடியாக கட்டுப்படுத்த தவறினால், அதற்கான செலவுகளும் எதிர்காலத்தில் அதிகரிக்கலாம் எனவும் மருத்துவ சங்கங்கள் கூறியுள்ளன. இலங்கை வைத்திய சங்கம், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், விசேட மருத்துவ நிபுணர்களின் சங்கம், இலங்கை வைத்திய சங்கத்தின் அனைத்து கல்லூரிகள் குழு ஆகியன இணைந்து இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளன.

Popular

More like this
Related

டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்திற்கான 2026 திட்டங்கள்

டிஜிட்டல் பொருளாதார அமைச்சினால் 2025 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம்...

இனிமேல் அமைதியைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்ற கடமை எனக்கு இல்லை: அமெரிக்க ஜனாதிபதி.

இனி அமைதியைப் பற்றி மட்டுமே சிந்திக்கப் போவதில்லை என்று நோர்வே பிரதமருக்கு...

பாகிஸ்தானில் கல்வி பயின்று திரும்பிய இலங்கை மாணவர்களுக்கு விசேட வரவேற்பு.

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், பாகிஸ்தானில் அண்மையில் தமது கல்வியை நிறைவு செய்து...

மோசமான நிலையில் காற்றின் தரம்: சுவாச பிரச்சினைகள் ஏற்படும் அபாயம்.

நாட்டின் சில பகுதியில் காற்றின் தரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார...