இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,828 பேர் இன்று (21) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 125,360 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் 154,786 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இவர்களில் 1,089 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.