புதைக்கப்பட்ட நீதி! வஸீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்டு இன்றுடன் 9ஆண்டுகள் நிறைவு!

Date:

கொலை செய்யப்பட்ட ரக்கர் வீரர் வஸீம் தாஜுதீனின் குடும்பத்தினர் அவருடைய கொலைக்கு நீதி கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது இப்போது கனவாகியுள்ளது .

இன்றுடன் ( மே 17 )வஸீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்டு ஒன்பது ஆண்டுகள் பூர்த்தியாகின்றது.

ஆண்டுகள் புயலைப் போல கடந்துவிட்டன .நீதி ஒரு மாயை என்பது இந்த விடயத்தில் நிரூபணமானது.எங்களுடைய காயம் இன்னும் தணியவில்லை.இது ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்த நேரத்தில் வஸீமுக்கு என்ன நடந்தது என்பது இன்னும் எங்களுக்கு புரியாத புதிராகவே இன்றுவரை உள்ளது.வஸீமின் கடைசி தருணங்களை நாங்கள் நினைத்து இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று வஸீமின் சகோதரி வைத்தியர் ஆயிஷா தாஜுதீன் நேற்று இரவு தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

கார் விபத்தில் தாஜுதீன் கொல்லப்பட்டார் என்று ஆரம்பத்தில் கூறப்பட்டது எனினும் பின்னர் அது ஒரு கொலை என தெரியவந்தது.2015 இல் பதவியேற்ற அரசாங்கம் இக் கொலை குறித்து புதிய விசாரணைகளை மேற்கொண்டிருந்தது.ஆனாலும் முக்கிய குற்றவாளிகளை கைது செய்வதை தவறிவிட்டது.இது குறித்த விசாரணைகளை தற்போதுள்ள அரசாங்கம் வாயை மூடியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்திற்கான 2026 திட்டங்கள்

டிஜிட்டல் பொருளாதார அமைச்சினால் 2025 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம்...

இனிமேல் அமைதியைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்ற கடமை எனக்கு இல்லை: அமெரிக்க ஜனாதிபதி.

இனி அமைதியைப் பற்றி மட்டுமே சிந்திக்கப் போவதில்லை என்று நோர்வே பிரதமருக்கு...

பாகிஸ்தானில் கல்வி பயின்று திரும்பிய இலங்கை மாணவர்களுக்கு விசேட வரவேற்பு.

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், பாகிஸ்தானில் அண்மையில் தமது கல்வியை நிறைவு செய்து...

மோசமான நிலையில் காற்றின் தரம்: சுவாச பிரச்சினைகள் ஏற்படும் அபாயம்.

நாட்டின் சில பகுதியில் காற்றின் தரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார...