பொடி லொசியின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு ஆலோசனை!

Date:

பொடி லொசியின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு ஆலோசனை!

கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலக குழு உறுப்பினரான ஜனித் மதுசங்க எனும் பொடி லொசி என்பவரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்குவதாக சட்டமா அதிபர் இன்று (20) மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய பாதுகாப்பை உறுதி செய்யும் உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி பொடி லொசி தாக்கல் செய்த மனு இன்று (20) சோபித ராஜகருணா மற்றும் தம்மிக கனேபொல ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் காவலில் இருந்த சந்தேக நபர்கள் இருவர் இதற்கு முன்னர் வேறு பொலிஸ் பிரிவிற்கு மாற்றப்பட்ட பின்னர் விசாரணைகளுக்காக வௌியில் அழைத்து சென்ற நிலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்திருந்ததாக பொடி லொசி சார்ப்பில் நீதிமன்றல் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் அறிவித்திருந்தார்.

இந்த நிலை தனக்கும் ஏற்படுமோ என்ற அச்சம் தன்னுடைய கட்சிக்காரருக்கு ஏற்பட்டுள்ளதால் அவருடைய பாதுகாப்பை உறுதி செய்யுமாறு உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு அவர் நீதிமன்றத்திடம் கோரியிருந்தார்.

Popular

More like this
Related

2 ஆண்டு போர் முடிவுக்கு வந்தது: டிரம்ப் தலைமையில் இஸ்ரேல் – ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது: அடுத்து என்ன?

இஸ்ரேல் - காசா போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நேற்று எகிப்தில்...

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: தேடப்பட்டு வந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ...

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. வரையான பலத்த மழை

இன்றையதினம் (14) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்...

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...