மக்களின் அச்சத்தை போக்குவதற்கு துரித எரிபொருள் விநியோகங்கள்

Date:

மக்களுக்கு ஏற்பட்டுள்ள வீணான அச்சத்தை போக்கும் வகையில், எரிபொருள் விநியோகம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கின் தற்போதைய நிலைமைகளால்,எரிபொருள் குறித்து மக்களுக்கு ஏற்பட்ட பீதியையடுத்து நேற்றுக்காலை பத்து மணிக்கிடையில் 2,325,349 லீற்றர் டீசல் மற்றும் 2,904,000 லீற்றர் பெட்ரோலை விநியோகித்ததாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்தார்.

இதேபோன்று நேற்று முன்தினமும் 3,018,349 லீற்றர் டீசல் மற்றும் 3,920,400 லீற்றர் பெட்ரோலை பொது மக்களுக்காக விநியோகித்ததாகவும் அவர் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (02) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் இது குறித்து மேலும் தெரிவித்த அவர்,

அதிகரித்த தேவையின் காரணமாக சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தற்காலிக எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டது.

மோசடிக்காரர்கள் தற்போதைய நிலைமையைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர்.

இதனால் வழக்கமான நுகர்வோருக்கு சிரமம் ஏற்படுகிறது. எரிபொருள் கேன்கள் அல்லது போத்தல்களில் வழங்கப்படாது.

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போரினால் ஏற்பட்ட கவலைகள் இருந்தபோதிலும், நாட்டில் போதுமான எரிபொருள் தற்போதைய பெட்ரோல் கையிருப்பு 37 நாட்களுக்கு போதுமானது.

இந்தியா, சிங்கப்பூர் மற்றும் தென் கொரியாவிலிருந்து வரும் சரக்கு கப்பல்கள் மூலமே எமக்கான கேள்வி மனு சமர்ப்பிக்கப்பட்ட எரி பொருட்கள் கிடைக்கும்.

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பரிந்துரைகளை அமுல்படுத்த விசேட நிபுணர் குழு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கும் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான...

சுரேஷ் சலே பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் ஆஜர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின்...

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா மாத்தறையில்..!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா எதிர்வரும் மே 27...

காசாவுக்கான உலகளாவிய ‘சுமுத் ஃப்ளோட்டிலா’ பயணம்: இலங்கை பிரதிநிதியாக சமீரா மெஹ்பூப்தீன் பங்கேற்பு.

பலஸ்தீனத்தின் மீதான முற்றுகையை முறியடித்து, அங்குள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை...