மக்களின் அச்சத்தை போக்குவதற்கு துரித எரிபொருள் விநியோகங்கள்

Date:

மக்களுக்கு ஏற்பட்டுள்ள வீணான அச்சத்தை போக்கும் வகையில், எரிபொருள் விநியோகம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கின் தற்போதைய நிலைமைகளால்,எரிபொருள் குறித்து மக்களுக்கு ஏற்பட்ட பீதியையடுத்து நேற்றுக்காலை பத்து மணிக்கிடையில் 2,325,349 லீற்றர் டீசல் மற்றும் 2,904,000 லீற்றர் பெட்ரோலை விநியோகித்ததாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்தார்.

இதேபோன்று நேற்று முன்தினமும் 3,018,349 லீற்றர் டீசல் மற்றும் 3,920,400 லீற்றர் பெட்ரோலை பொது மக்களுக்காக விநியோகித்ததாகவும் அவர் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (02) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் இது குறித்து மேலும் தெரிவித்த அவர்,

அதிகரித்த தேவையின் காரணமாக சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தற்காலிக எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டது.

மோசடிக்காரர்கள் தற்போதைய நிலைமையைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர்.

இதனால் வழக்கமான நுகர்வோருக்கு சிரமம் ஏற்படுகிறது. எரிபொருள் கேன்கள் அல்லது போத்தல்களில் வழங்கப்படாது.

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போரினால் ஏற்பட்ட கவலைகள் இருந்தபோதிலும், நாட்டில் போதுமான எரிபொருள் தற்போதைய பெட்ரோல் கையிருப்பு 37 நாட்களுக்கு போதுமானது.

இந்தியா, சிங்கப்பூர் மற்றும் தென் கொரியாவிலிருந்து வரும் சரக்கு கப்பல்கள் மூலமே எமக்கான கேள்வி மனு சமர்ப்பிக்கப்பட்ட எரி பொருட்கள் கிடைக்கும்.

Popular

More like this
Related

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் 3ஆவது ரந்தோலி பெரஹெரா நாளை: சிறப்புப் போக்குவரத்து திட்டம் அறிவிப்பு!

வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெர திருவிழாவின்...

22 ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலத்துக்கு எதிராக 21 மனுக்கள் தாக்கல்!

அரசாங்கம் முன்மொழிந்துள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலத்தை எதிர்த்து உயர்...

இலங்கைக்கான சேவையை ஆரம்பிக்கும் அவுஸ்திரேலியாவின் ஜெட்ஸ்டார் ஏர்வேஸ்!

அவுஸ்திரேலியாவின் ஜெட்ஸ்டார் ஏர்வேஸ் (Jetstar Airways), மெல்போர்ன் – கொழும்பு இடையிலான...

எல் நினோ தாக்கம் தீவிரம்: 74 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 34% ஆக வீழ்ச்சி

நாட்டில் அநேகமான பகுதிகளில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக சுமார் 74...