மகாவலி அதிகார சபையின் நில சவீகரிப்புத் திட்டம் நிறுத்தப்படும் – சமல் உறுதி!

Date:

முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அதிகார சபையால் திட்டமிடப்பட்ட நில சுவீகரிப்பு நிறுத்தப்படும் என்று துறைசார் இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச, தமிழ்த் தேசியக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் நேற்று (05) உறுதியளித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனின் ஏற்பாட்டில் கடந்த மாதம் இடம்பெற்ற சந்திப்பின் அடிப்படையில் நேற்று கல்முனை பிரதேச செயலக விவகாரம் தொடர்பான விசேட சந்திப்பு நடைபெற்றது.

இந்த விடயம் தொடர்பில் அமைச்சர்கள், செயலாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கு நேரில் சென்று பார்வையிட்டு கருத்தறிந்து இறுதி முடிவு எட்டப்படும் என்று தங்களால் ஏற்கனவே உறுதியளிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த உத்தரவாதம் மீறப்பட்டு மகாவலி அதிகார சபை செயற்பட முனைகின்றது என தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

இதைச் செவிமடுத்த துறைசார் இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச, குறித்த பகுதிக்கு எம்மால் நேரில் பயணித்து அது தொடர்பான இறுதி முடிவு எட்டப்படும் வரையில் மகாவலி அதிகார சபையின் செயற்பாட்டை நிறுத்துமாறு செயலாளர் ஊடாகக் கடிதம் அனுப்பப்படும் என்று உத்தரவாதம் வழங்கினார்.

இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்பவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...