மாரவில வைத்தியசாலையில் 8 வைத்தியர்கள் உட்பட 31 ஊழியர்களுக்கு கொரோனா

Date:

மாரவில ஆதார வைத்தியசாலையில் 8 வைத்தியர்களுக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை அந்த வைத்தியசாலையில் 31 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் தினுஷா பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

தற்போது அந்த வைத்தியசாலையின் 4 வாட்டுகள் மூடப்பட்டுள்ளதாகவும் விரைவில் அவற்றை திறக்க எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவசர சிகிச்சை பிரிவுகள் இரண்டும், தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சையளிக்கும் இரண்டு வாட்டுகளும் மூடப்பட்டுள்ளன.

அந்த வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் கடமையாற்றிய தாதியர்கள் இருவருக்கு தொற்று ஏற்பட்டதாக கடந்த வாரம் உறுதிப்படுத்தப்பட்டது.

இதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனைக்கு அமைய நேற்று 5 வைத்தியர்கள் உட்பட 20 பேருக்கு தொற்று உறுதியானது.

எனினும் நேற்று மாலை வேளையில் அந்த எண்ணிக்கை 29 அதிகரித்தது.

இன்று காலையாகும் போது அந்த வைத்தியசாலையில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்வடைந்துள்ளது.

இவ்வாறு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களில் 8 வைத்தியர்களும் அடங்குகின்றனர்.

இதனால் அந்த வைத்தியசாலைக்கு அழைத்துவரப்படும் நோயாளர்கள் சிலாபம் பொது வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தமிழக முதல்வர் விஜய்க்கு இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வாழ்த்து!

புதிய தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அநுர...

உணர்ச்சி பொங்க முதலமைச்சராக பதவியேற்றார் த.வெ.க. தலைவர் விஜய்

தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் பதவியேற்றார். தவெக தலைவர் விஜய்க்கு முதல்வராக...

முதல்வராக விஜய் பதவியேற்பு: சென்னையில் ராகுல் காந்தி!:

தமிழ்நாட்டின் முதல்வராக தவெக தலைவர் விஜய் இன்று(மே 10) பதவியேற்கவுள்ள நிலையில்,...

பெரும்பான்மையை ஏற்றுக் கொண்டார் ஆளுநர்: த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல்....