அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் செயலாளர்கள் பாலஸ்தீன தூதரகத்திற்கு விஜயம்

Date:

இன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்களும் அதன் உதவிப் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம் அவர்களும் பலஸ்தீன தூதரகத்திற்கு விஜயம் செய்து பலஸ்தீன மக்களுக்கு எதிராக நடைபெறும் அநியாயங்கள் தொடர்பில் இலங்கை முஸ்லிம்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக தங்களது கவலையையும் வருத்தத்தையும் தெரிவித்தனர்.

இச்சந்திப்பில் நம் நாட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இவ்விடயம் தொடர்பில் தனது கரிசனையை தெரிவித்திருப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இச்சந்திப்பின்போது பலஸ்தீன மக்களுக்கு தங்களது ஆதரவை தெரிவிக்கும் வகையில் ஒரு ஆவணம் பாலஸ்தீன தூதரகத்திற்கு வழங்கிவைக்கப்பட்டது.

இப்பிரச்சினை அவசரமாக நீங்கி, அம்மக்களுக்கு அமைதி மற்றும் பாதுகாப்பு கிடைக்க பிரார்த்திப்போம்.

Popular

More like this
Related

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...