அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் செயலாளர்கள் பாலஸ்தீன தூதரகத்திற்கு விஜயம்

Date:

இன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்களும் அதன் உதவிப் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம் அவர்களும் பலஸ்தீன தூதரகத்திற்கு விஜயம் செய்து பலஸ்தீன மக்களுக்கு எதிராக நடைபெறும் அநியாயங்கள் தொடர்பில் இலங்கை முஸ்லிம்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக தங்களது கவலையையும் வருத்தத்தையும் தெரிவித்தனர்.

இச்சந்திப்பில் நம் நாட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இவ்விடயம் தொடர்பில் தனது கரிசனையை தெரிவித்திருப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இச்சந்திப்பின்போது பலஸ்தீன மக்களுக்கு தங்களது ஆதரவை தெரிவிக்கும் வகையில் ஒரு ஆவணம் பாலஸ்தீன தூதரகத்திற்கு வழங்கிவைக்கப்பட்டது.

இப்பிரச்சினை அவசரமாக நீங்கி, அம்மக்களுக்கு அமைதி மற்றும் பாதுகாப்பு கிடைக்க பிரார்த்திப்போம்.

Popular

More like this
Related

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...

பலஸ்தீனத்திற்கான உலக ஒற்றுமை பேரணி கொழும்பில்: ஆசிய நாடுகள் இணையும் மனிதாபிமானப் போராட்டம்!

கொழும்பில் ஆகஸ்ட் 15, 2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு விஹார...

இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் குமார ஜயகொடி தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின்...

முன்னாள் அமைச்சர் ராஜிதவை கைது செய்ய உத்தரவு

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணையில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித...