இன்று இரவு சில பகுதிகளுக்கு 200 மி.மீ மழை வீழ்ச்சி!

Date:

நேற்று(13) காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரையிலான காலப்பகுதியில் மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் 100 மில்லி மீட்டருக்கு மேற்பட்ட மழை வீழ்ச்சி பதிவாகியிருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

காலி மாவட்டத்தில் ஹினிதுமவில் 190 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

 

இதேவேளை, தெற்கு, மேல், சப்ரகமுவ ,வடமத்திய, மத்திய மாகாணங்களில் மழையுடனான கால நிலை மேலும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன் சில இடங்களில் இரவு வேளையில் 200 மில்லி மீட்டர் மழைவீழ்ச்சி இடம்பெறக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பலத்த மழை பெய்யும் போது சில பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள் என்று திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...