2020 க.பொ.த. உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் ஹொரவ்பொத்தான, அங்குநொச்சிய அல்மாஸ் மஹா வித்தியாலயத்தின் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வரலாற்றுச் சாதனையை எட்டியுள்ளது.
33 மாணவர்கள் கலை துறையில் பரீட்சைக்கு தோற்றி 25 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதோடு அதில் 11 மாணவர்கள் பல்கலைக்கழகம் பெற தகுதி பெற்றுள்ளதாக பாடசாலையின் அதிபர் ஏ.ஜ.எம் தௌபீக் தெரிவித்தார்.
இம்முறை அதிகூடிய மாணவர்கள் பல்கலைக்கழகம் பெற தகுதிபெற்றுள்ளமை பாடசாலையின் வரலாற்று சாதனையாக பதிவாகுவதாக பாடசாலையின் அதிபர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன் கொவிட்19 அசாதாரண சூழ்நிலையில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் தியாகம் பெரிதும் பாராட்டப்படவேண்டியது எனவும் இதற்காக பாடுபட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் பாடசாலையின் அதிபர் ஏ.ஜ.எம் தௌபீக் தெரிவித்தார்.
முஹம்மட் ஹாசில்