‘ஜன சுவய’ திட்டத்தின் 12 ஆவது கட்டமாக மருத்துவமனை உபகரணங்கள் எதிர்க்கட்சித் தலைவரால் வழங்கிவைப்பு!(காணொளி)

Date:

ஐக்கிய மக்கள் சக்தியின் ‘எதிர்க்கட்சியிலிருந்து ஒரு மூச்சு’ திட்டத்தின் ஓர் அங்கமாக சஜித் பிரேமதாசாவின் எண்ணக்கருவை அடிப்படையாகக் கொண்டு நாடு முழுவதும் ஆரோக்கியமான ஓர் தேசத்தை உருவாக்குவதை இலக்காகக் கொண்ட ‘ஜன சுவய’ திட்டத்தின் 12 ஆவது கட்டமாக ரூ.2,805,000 மதிப்புள்ள மருத்துவமனை உபகரணங்கள் நன்கொடையாக இன்று(15) மாளிகாவத்தை ஆர்.பிரேமதாச வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டன.எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால் மாவட்ட வைத்திய அதிகாரி ஏ.எஸ்.விதானகமகே விடம் ஒப்படைக்கப்பட்டது.

அதன்படி,ரூ.2,130,000 மதிப்புள்ள அல்ட்ராசவுண்ட்(Ultrasound Scanner)ஸ்கேனரும், ரூ.675,000 மதிப்புள்ள ஆட்டோகிளேவ் டேபிள் லேப்பும்(Autoclave Table Lap) நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டது.

 

கொரோனா பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுகாதார நிவாரணம் வழங்குவதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற குழு, அமைப்பாளர்கள், உறுப்பினர்கள்,கட்சியின் வெளிநாட்டு கிளைகள், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஆதரவாளர்கள் இனைந்ததாக “ஜன சுவய” திட்டம் மற்றும் “எதிர்க்கட்சியிலிருந்து ஓர் மூச்சு” திட்டத்தை செயல்படுத்துகின்றன.

காணொளி இணைப்பு:https://youtu.be/ekwlKwPHRKY

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...