தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட உள்ள ‘இடுகம’ நிதி!

Date:

சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின் தற்போதுள்ள ரூ.1,360,922,969.24 இருப்பு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடக பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது..

நிதியத்திற்கு வரவு வைக்கப்பட்ட மொத்த தொகை ரூ. 1,752,402,793.24 ஆகும். இதுவரை செலவிடப்பட்ட தொகை ரூ .391,479,824.00. இது சேகரிக்கப்பட்ட மொத்த தொகையில் 23% ஆகும்.

 

நிதியத்திற்கு வரவு வைக்கப்பட்ட மொத்த தொகை – ரூ. 1,752,402,793.24

நிதியின் தற்போதைய இருப்பு – ரூ. 1,360,922,969.24

 

 

தடுப்பூசிகளுக்கு அரசாங்கம் செலவிட எதிர்பார்க்கும் தொகையுடன் ஒப்பிடும் போது மீதமுள்ள இருப்பு மிகவும் சிறிய தொகையாகும். எனினும் நிதியத்தின் இருப்பை தடுப்பூசிக்குப் பயன் படுத்துவதன் முக்கியத்துவத்தை இந்த நிதியத்தின் முகாமைத்துவ சபை சுட்டிக் காட்டியுள்ளது.

 

நிதியத்தின் பணம் செலவிடப்பட்ட விதம் பின்வருமாறு.

 

தொற்றுநோய் நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட செலவுகள்

 

பி.சி.ஆர் சோதனை தொடர்பான செலவுகள் – 42,605,812.00

 

விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்களுக்கு – 67,543,967.00

 

தனிமைப்படுத்தலுடன் தொடர்புடைய செலவுகள் – 38,031,065.00

 

நிர்வாக செலவுகள் – 3,000.00

 

மொத்தம் – 391,479,824.00

 

செலுத்த வேண்டியவை

தடுப்பூசி ஏற்றல் தொடர்பான செலவுகள் – 41,545,980.00

10 ஆம்புலன்ஸ் வண்டிகள் கொள்வனவிதற்கு – 194,000,000.00

ஐ.சி.யூ படுக்கைகள் கொள்வனவு – 7,750,000.00

செலுத்தப்பட்ட மற்றும் செலுத்தப்பட வேண்டிய மொத்த செலவு- 391,479,824.00

இந்த செலவுகள் அனைத்தும் சுகாதார அமைச்சு மற்றும் இராணுவ தலைமையகம் ஆகியவற்றால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பொது மக்கள், பல உள்நாட்டு நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் சிலர் இட்டுகம கொவிட் நிதியத்திற்கு பணத்தை அன்பளிப்பாக வழங்கியுள்ளனர். கொவிட் -19 நிதிக்கு சர்வதேச நிதி நிறுவனங்கள் அல்லது அமைப்புகள் பங்களிக்கவில்லை

 

சர்வதேச சட்டத்தின் படி, வெளிநாட்டு உதவி மற்றும் நன்கொடைகள் திறைசேரிக்கே வழங்கப் படுகின்றன. இந்த நிதியத்திற்கும் சர்வதேச அமைப்புகளின் நன்கொடைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. கொவிட் 19 நிதியத்திற்கு 2020 ஆம் ஆண்டில் அதிகமான பொதுமக்களால் நன்கொடைகள் கிடைக்கப் பெற்ற போதும், 2021 ஏப்ரல் மாதம் வரை கிடைக்கப் பெற்ற சராசரி மாத நன்கொடை சுமார் ரூ .7 மில்லியன் ஆகும்.

 

இது தொடர்பாக பல்வேறு ஊடகங்களில் பரவிய தகவல்கள் உண்மையல்ல என்றும் 2020 ஆம் ஆண்டிற்கான நிதியத்தின் கணக்குகள் கணக்காய்வுக்காக தேசிய கணக்காய்வு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் நிதியத்தின் முகாமைத்துவ சபை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...