தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: ராஜினாமா செய்த பழனிசாமி.. மே 7-ல் பதவியேற்கும் ஸ்டாலின்!

Date:

தமிழக தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று, மே 2-ம் தேதி காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. பெரும்பாலான தொகுதிகளின் முடிவுகள் வெளியாகிவிஒட்டது. இன்னும் ஒரு சில தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை மட்டும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திமுக இந்த தேர்தலில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின், வரும் வெள்ளிக்கிழமை, அதாவது மே மாதம் 7-ம் தேதி முதல்வராக பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்பு விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை திமுக எம்.எல்.ஏ க்கள் கூட்ட நடைபெற இருக்கிறது. அதில் அவர் முறைப்படி முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார்..

இதனிடையே, தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களில் முன்னிலையில் இருக்கும் நிலையில் தமிழக முதல்வராக இருந்து வந்த எடப்பாடி பழனிசாமி தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்… !

Popular

More like this
Related

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் 1,091 குடும்பங்கள் பாதிப்பு!

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 1,091 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும்...

இலங்கையின் பேசப்படாத தேசிய பாதுகாப்பு பிரச்சினைகள்

-ரிசா யெஹியா சிரேஷ்ட கட்டிடக் கலைஞர். பகுதி-1 இலங்கையில் தேசிய பாதுகாப்பு இன்னும் பெரும்பாலும்...

பொல்பிட்டியவில் காணாமல் போயிருந்த நால்வரின் சடலங்களும் மீட்பு!

பொல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரஹேனகம பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு...

மோசமான வானிலை: பரீட்சைகள் குறித்து நாளை விசேட கலந்துரையாடல்!

நிலவும் மோசமான வானிலை நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, நடைபெறவுள்ள தரம் 5...