துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டமூலம் தொடர்பான பாராளுமன்ற விவாதம் புதன் (19) மற்றும் வியாழன் (20) ஆகிய இரு தினங்களில் இடம்பெறவுள்ளது.
அந்த இரு தினங்களிலும் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல கேள்விக்கான நேரம் ஒதுக்கப்படாது என பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தஸநாயக்க தெரிவித்தார்.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (18) நிதி சட்டமூலத்தின் இரண்டு பிரேரணைகளும், துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி சட்ட மூலத்தின் கீழான பிரேரணைகள் இரண்டும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)