பயணக்கட்டுப்பாடுகள் தொடர்பில் இன்று ஷவேந்திர சில்வா வெளியிட்ட புதிய செய்தி..!

Date:

கடந்த வியாழக்கிழமை இரவு 11.00 மணிக்கு நாடு முழுவதும் விதிக்கப்பட்டு இருந்த பயணக்கட்டுப்பாடு நாளை அதிகாலை 4.00 மணி முதல் நீக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

மேலும் நாட்டில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலகட்டத்தில் மக்கள் அளித்த ஆதரவுக்கு இராணுவத் தளபதி நன்றி தெரிவித்தார்.அத்தோடு அடையாள இலக்கணத்தின் வரிசையில் மக்களுக்கு வெளியே செல்வதற்கு அனுமதிக்கப்பட்டாலும் கூட தொழிலுக்கு செல்பவர்களுக்கு அந்த நடைமுறை செல்லுபடியாகாது என்பது குறிப்பிடத்தக்கது

பயணத் தடைகள் நீக்கப்பட்ட பின்னர் மீண்டும் ஒன்று கூட வேண்டாம் என்றும் சுகாதாரத் துறை வழங்கிய சுகாதார அறிவுறுத்தல்களுக்கு கட்டுப்பட வேண்டும் என்றும் இராணுவத் தளபதி மக்களைக் கேட்டுக்கொண்டார்.

சுகாதாரத் துறையின் அறிவுறுத்தல்களை மக்கள் பின்பற்றினால் அடுத்த 2-3 வாரங்களில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் இராணுவத் தளபதி நம்பிக்கை வெளியிட்டார்.

இதற்கிடையில், குறைந்த அறிகுறிகளைக் காட்டும் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளுக்கு வீட்டு சிகிச்சை குறித்த வழிகாட்டுதல்களை வரும் நாட்களில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிடுவார் என்றும் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...