பயணத் தடையை மீறி மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் குவிந்த மக்கள்!

Date:

பொருளாதார மத்திய நிலையங்களை திறந்து வைக்குமாறு அரசாங்கம் அறிவிப்பு விடுத்திருந்த நிலையில், இரவு நேர மீகொட பொருளாதார மத்திய நிலையம் நேற்று (14) திறந்து வைக்கப்பட்டிருந்தது.

எனினும், மரக்கறிகளை கொள்வனவு செய்வதற்காக பொது மக்கள் வராத காரணத்தால் சுமார் 12 இலட்சம் ரூபாய் பெறுமதியான மரக்கறிகளை இலவசமாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகள் இலவசமாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அறிந்த பொதுமக்கள் பயணத் தடையையும் மீறி ஆயிரத்திற்கும் அதிகமானோர் நீண்ட வரிசையில் நின்று மரக்கறியை பெற்றுச் செல்ல வந்திருந்தனர்.

இதன் காரணமாக, எதிர்வரும் திங்கட் கிழமை வரை மரக்கறிகளை கொண்டு வருவதை நிறுத்தவும், கடைகளை மூடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார மத்திய நிலைய வர்த்தக சங்கத்தின் செயலாளர் சமிந்த ரொஹான் தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...