பயணத் தடையை மீறி மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் குவிந்த மக்கள்!

Date:

பொருளாதார மத்திய நிலையங்களை திறந்து வைக்குமாறு அரசாங்கம் அறிவிப்பு விடுத்திருந்த நிலையில், இரவு நேர மீகொட பொருளாதார மத்திய நிலையம் நேற்று (14) திறந்து வைக்கப்பட்டிருந்தது.

எனினும், மரக்கறிகளை கொள்வனவு செய்வதற்காக பொது மக்கள் வராத காரணத்தால் சுமார் 12 இலட்சம் ரூபாய் பெறுமதியான மரக்கறிகளை இலவசமாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகள் இலவசமாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அறிந்த பொதுமக்கள் பயணத் தடையையும் மீறி ஆயிரத்திற்கும் அதிகமானோர் நீண்ட வரிசையில் நின்று மரக்கறியை பெற்றுச் செல்ல வந்திருந்தனர்.

இதன் காரணமாக, எதிர்வரும் திங்கட் கிழமை வரை மரக்கறிகளை கொண்டு வருவதை நிறுத்தவும், கடைகளை மூடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார மத்திய நிலைய வர்த்தக சங்கத்தின் செயலாளர் சமிந்த ரொஹான் தெரிவித்தார்.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...