முள்ளிவாய்க்காலில் நடந்தவைகளை பிரதமரிற்கு நாடாளுமன்றத்தில் நினைவுபடுத்திய சுமந்திரன் எம்.பி!

Date:

பல ஆயிரக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டதை பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு நினைபடுத்த விரும்புகிறேன் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் முடிவடைந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர்,

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து நான்கு லட்சம் பொது மக்களை மிகவும் பாதுகாப்பாக மீட்டெடுத்தாகவும், அதேபோன்று, தமிழ் மக்களின் அகதி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்ததுடன், வடக்கு கிழக்கு மக்களை மீள்குடியேற்றினோம் என்றும் குறிப்பிட்டார்.

அதேபோன்று, நாட்டில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து சுபீட்சமான ஒரு எதிர்காலத்தை உருவாக்கியிருக்கிறோம் என்றும் மஹிந்த உரையாற்றினார்.

இதன்போது குறிக்கிட்டுப் பேசிய சுமந்திரன், பன்னிரென்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒன்றை பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இதே நாளில் பல ஆயிரக்கணக்கான பொது மக்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் கொல்லப்பட்டதை நினைவுபடுத்துகிறேன் என்றார்.

Popular

More like this
Related

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...