அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

Date:

தபால் ஊழியர்களுக்கு கொவிட் தடுப்பூசி மற்றும் வைரஸ் தொற்று தடுப்பு உபகரணங்களை அரசாங்கம் வழங்கத் தவறினால் நாளை நள்ளிரவிலிருந்து தமது பணிகளில் இருந்து ஒதுங்கவுள்ளதாக ஐக்கிய தபால் ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் சிந்தக பண்டார தெரிவிக்கையில், நாட்டிலுள்ள 26 ஆயிரம் தபால் ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவில்லை.

அத்துடன் முககவசம் மற்றும் சனிடைசர் கூட வழங்கப்படவில்லை. இதனால் தபால் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் நாளாந்தம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்படும்வரை தபால் சேவையை ஒருவாரம் அல்லது இரண்டொரு தினங்களுக்கு நிறுத்துமாறு அரசிடம் நாம் கேட்டிருந்தோம். ஆனால் எமது கோரிக்கையை அரசாங்கம் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

பெரும்பான்மையை ஏற்றுக் கொண்டார் ஆளுநர்: த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல்....

ஐயூஎம்எல் ஆதரவு: தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு...

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள்...

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு

இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின்...