ஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பு 11 பேர் பலி!

Date:

ஆப்கானிஸ்தானின் தென் பகுதி மாநிலமான ஸாபுள் மாநிலத்தில் நேற்று இரவு இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 க்கும் அதிகமானது என்றும் இதில் பெண்கள் சிறுவர்கள் ஆகியோரும் அடங்குவர் என்றும் காயமடைந்த

பலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

நேற்றிரவு ஸாபுல் மாநிலத்தில் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்றை இலக்கு வைத்து வீதியோரத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்துள்ளது.

அண்மைக்காலத்தில் ஆப்கானிஸ்தானில் இவ்வாறான குண்டுத் தாக்குதல்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன எதிர்வரும் செப்டம்பர் மாதம் அளவில்

தன்னுடைய படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து விலக்கிக் கொள்ளப் போவதாக அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து இந்த தாக்குதல்கள் அதிகரித்து உள்ளதாக அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனிடையே இவ்வார பிற்பகுதியில் இடம்பெறவுள்ள நோன்புப் பெருநாளை முன்னிட்டு மூன்று நாள் யுத்த நிறுத்தத்தை அறிவிக்க உள்ளதாகவும் தலிபான் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

காணொளி 👇

https://www.aljazeera.com/news/2021/5/10/israeli-forces-raid-al-aqsa-compound-live

 

Popular

More like this
Related

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...