தமிழக தேர்தல் முடிவுகள் 2021 | ஜெயக்குமார் முதல் துரைமுருகன் வரை…! -வி.ஐ.பி வேட்பாளர்கள் பின்னடைவு

Date:

தொடர்ந்து பின் தங்கும் 4 அமைச்சர்கள்….!!

திருச்சி கிழக்கில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வெல்லமண்டி நடராஜன், மதுரவாயல் தொகுதியில் போட்டியிடும் பெஞ்சமின், ஆவடி தொகுதியில் போட்டியிடும் பாண்டியராஜன் மற்றும் ராயபுரத்தில் போட்டியிடும் ஜெயக்குமார் ஆகியோர் வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து பின்தங்கி வருகின்றனர்.

வி.ஐ.பி வேட்பாளர்கள் முன்னிலை விவரங்கள்!

ராயபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் தொடர்ந்து பின்தங்கி வருகிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் இரா.மூர்த்தி கூடுதலாக 702 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். சிறிய வித்தியாசம் என்பதால் கடும் போட்டு நிலவுகிறது.

கோவில்பட்டி தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிடும் அமமுக வேட்பாளர் டிடிவி தினகரனை விடவும், அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜு 424 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகித்து வருகிறார். இங்கும் வித்தியாசம் மிகச் சிறிய அளவு என்பதால் கடும் போட்டி நிலவுகிறது.

ஆவடி தொகுதியில் திமுக வேட்பாளர் சா.மு.நாசரை விடவும் 4,009 வாக்குகள் குறைவாக பெற்று அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான மஃபா பாண்டியராஜன் தொடர்ந்து பின்தங்கி வருகிறார்.

காட்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர் துரைமுருகன் அதிமுக வேட்பாளர் ராமுவை விடவும் 398 வாக்குகள் குறைவாக பெற்று பின்தங்கி வருகிறார். இங்கும் வித்தியாசம் மிகச் சிறிய அளவு என்பதால் தொடர்ந்து கடும் போட்டி நிலவுகிறது.

ராஜபாளையம் தொகுதியில் திமுக வேட்பாளர் தங்கபாண்டியன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை 1,909 வாக்குகள் கூடுதலாக பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

அரவக்குறிச்சியில் அண்ணாமலை பின்னடைவு..!!

அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை, திமுக வேட்பாளர் இளங்கோவை விட 600 வாக்குகள் குறைவான நிலையில் பின்தங்குகிறார்.

திமுக முன்னிலை..!

தமிழகத்தில் காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில், தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி 99 இடங்கள் பெற்று முன்னிலையில் இருக்கிறது.

திமுக கூட்டணி -99

அதிமுக கூட்டணி – 74

அமமுக கூட்டணி – 00

மநீம கூட்டணி – 01

நாதக – 00

நன்றி விகடன்

Popular

More like this
Related

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...

ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் உறுதிப்படுத்தியது.

ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உயிரிழந்ததாக உள்ளூர் செய்தி ஊடகம்...

சவூதி வாழ் இலங்கையர்களுக்கு இலங்கை தூதரகம் அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண பாதுகாப்பு சூழ்நிலையை...