நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் பாதிப்பு!

Date:

கினிகத்தேனை பகுதியில் பெய்த பலத்த மழைக் காரணமாக பொல்பிட்டிய மாதெனியாவத்த பகுதியிலுள்ள வீடொன்றின் மீது இன்று அதிகாலை மண் மேடு சரிந்து விழுந்துள்ளது.

இதனால் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தாய் மற்றும் அவரது மகள் உட்பட ஐவர் காயமடைந்துள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.

 

அத்துடன் நாப்பாவல, தல்தூவ, தெஹியோவிட்ட உள்ளிட்ட கிராமங்களும் நீரில் மூழ்கின அத்துடன் களனி நதி பெருக்கெடுப்பு காரணமாக சீதாவக, தல்தூவ, மாகம்மன, தெஹியோவிட்ட மற்றும் நாப்பாவல ஆகிய கிராமங்களில் தாழ்வான பகுதிகள் தற்போது நீரில் மூழ்கியுள்ளதாக குறித்த பிரதேசத்தின் ஊடகவியலாளர் ஷபீர் முஹம்மத் தெரிவித்திருந்தார்.

தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக அத்தனகல்ல ஓயாவை அண்டிய திஹாரிய – தூல்மலை பிரதேசத்தின் சில பகுதிகளும் இன்று (14) வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு

மள்வானையில் களனி கங்கையினை அண்மித்த தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

36-ஆவது நேட்டோ உச்சிமாநாட்டை நடத்தத் தயாராகும் அங்காரா: உலகத் தலைவர்களை வரவேற்கிறது துருக்கி!

துருக்கி  தலைநகர் அங்காராவில் ஜூலை 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில்...

ட்ரோன்களைப் பயன்படுத்தி டெங்கு ஒழிப்புப் பணிகள் முன்னெடுப்பு

நாடளாவிய ரீதியில் டெங்கு பரவும் அபாயம் அதிகமாகக் காணப்படும் பகுதிகளில் நுளம்புகள்...

சிறுவர்களுக்கான சமூக ஊடக கட்டுப்பாடு தனிநபர் சட்டமூலம் நாடாளுமன்றில் முன்மொழிவு

இலங்கையில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவதை...

ஹிஜ்ரத் கற்றுத்தரும் பாடங்களை மீட்டிய ஹிஜ்ரி புத்தாண்டு நிகழ்வும் பரிசளிப்பு விழாவும்!

புத்தளம் மணல்குன்று முஸ்லிம் மகா வித்தியாலயம் ஏற்பாடு செய்த, 1448-வது ஹிஜ்ரி...