பொடி லொசியின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு ஆலோசனை!

Date:

பொடி லொசியின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு ஆலோசனை!

கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலக குழு உறுப்பினரான ஜனித் மதுசங்க எனும் பொடி லொசி என்பவரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்குவதாக சட்டமா அதிபர் இன்று (20) மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய பாதுகாப்பை உறுதி செய்யும் உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி பொடி லொசி தாக்கல் செய்த மனு இன்று (20) சோபித ராஜகருணா மற்றும் தம்மிக கனேபொல ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் காவலில் இருந்த சந்தேக நபர்கள் இருவர் இதற்கு முன்னர் வேறு பொலிஸ் பிரிவிற்கு மாற்றப்பட்ட பின்னர் விசாரணைகளுக்காக வௌியில் அழைத்து சென்ற நிலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்திருந்ததாக பொடி லொசி சார்ப்பில் நீதிமன்றல் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் அறிவித்திருந்தார்.

இந்த நிலை தனக்கும் ஏற்படுமோ என்ற அச்சம் தன்னுடைய கட்சிக்காரருக்கு ஏற்பட்டுள்ளதால் அவருடைய பாதுகாப்பை உறுதி செய்யுமாறு உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு அவர் நீதிமன்றத்திடம் கோரியிருந்தார்.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...