உரத் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள பெரிய வெங்காய உற்பத்தியாளர்கள்!

Date:

பொலன்னறுவை – எலஹெர பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள பெரிய வெங்காய உற்பத்தியாளர்கள் போதுமானளவு உரங்கள் பயன்பாட்டில் இல்லாமையால் தமது உற்பத்திகளை முன்னெடுப்பதில் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரதேச செயலக பிரிவிலுள்ள நிகபிட்டிய, கோட்டபிட்டிய, அதரகல்வெவ மற்றும் ஜெயசிரிபுர ஆகிய பகுதிகளிலுள்ள உற்பத்தியாளர்களே பெரிய வெங்காயத்தை பயிரிடுகின்றவர்கள். எனினும் தற்போது ஏற்பட்டுள்ள உரத் தட்டுப்பாடு காரணமாக தமது உற்பத்தி செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாமலுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

எனவே சம்பந்தப்பட்ட தரப்பினர் தங்களது உற்பத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல தேவையான அளவு உரங்களை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Popular

More like this
Related

அரசாங்கத்தின் சட்டமூலத்துக்கு எதிராக மேலும் மூன்று மனுத்தாக்கல்!

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்காக அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த...

டயானா கமகேவுக்கு நீதிமன்றம் பிடியாணை

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க...

கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினர் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை...

எதிர்வரும் நாட்களில் வானிலையில் மாற்றம்!

எதிர்வரும் நாட்களில் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய மாகாணங்களில் மாலை...