தனியார் சட்ட திருத்தம் | புதிய குழுவின் அறிக்கை பூர்த்தி 

Date:

முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் மேற் கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள்
தொடர்பான பிரச்சிைனகைள சிபாரிசு செய்வதற்காக அண்மையில் நியமிக்கப்பட்ட துறைசார்
புத்திஜீவிகள் குழு  தனது  அறிக்கையை பூர்த்தி செய்துள்ளது.

நீதியமைச்சர்  அலிசப்ரி, வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் தலைமையில் குறிப்பிட்ட குழுவினை  நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இக் குழுவில் ஒன்பது பேர்
அங்கம் வகிக்கின்றனர்.

முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில்மேற்கொள்ள வேண்டிய தித்தங்கள் தொடர்பாக அகில இலங்கை  ஜம்இய்யத்துல் உலமாசபை, அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. உட்பட பல அமைப்புக்கள்  சிபாரிசுகளை அனுப்பி வைத்திருந்ததாகவும் அவை கவனத்தில் கொள்ளப்பட்டதாகவும்  அடுத்த வாரம் இந்த குழு தனது சிபாரிசுகள் அடங்கிய அறிக்கையை
நீதியமைச்சர் அலி சப்ரியிடம் கையளிக்கவுள்ளதாகம் வக்பு சபையின்  தலைவர்  சப்ரி
ஹலீம்தீன்  தெரிவித்தார்.

அத்தோடு ஏற்கனவே 2009ஆம் ஆண்டு அப்போதைய  நீதியைமச்சர் மிலிந்த மொரகொட வினால் நியமிக்கப்பட்ட குழு ஏற்கனவே கையளித்துள்ள அறிக்கையும் கவனத்தில் கொள்ளப்படவுள்ளதாகவும் வக்பு சபையின்  தலைவர்  சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் தெரிவித்தார்.

விடிவெள்ளி

 

Popular

More like this
Related

முஸ்லிம் காங்கிரஸின் எம்.எஸ். அப்துல் வாஹித் இராஜினாமா.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்....

ராஜிதவின் வழக்கு விசாரணை – மேலதிக சாட்சியப் பதிவு நவம்பர் 17ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல்...

ஏர்பஸ் ஒப்பந்த ஊழல்; நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராக பெயரிட அறிவுறுத்தல்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கான ஏர்பஸ் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டதில் இடம்பெற்றதாகக் கூறப்படும்...

சவூதி அரேபியாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க பட்டத்து இளவரசரின் ஒட்டகத் திருவிழா நிறைவு!

சவூதி அரேபியாவின் தாயிஃப் (Taif) வரலாற்றுச் சிறப்புமிக்க ஒட்டகப் பந்தய மைதானத்தில்,...