முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சியப் பதிவு எதிர்வரும் நவம்பர் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2012ஆம் ஆண்டு மோதர மீன்பிடித் துறைமுகத்தை தனியார் நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (14) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதையடுத்து, மேலதிக சாட்சியப் பதிவு நவம்பர் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாயில் முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்றது.
இதன்போது முறைப்பாட்டுத் தரப்பு சாட்சிகளிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டதுடன், பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகளால் குறுக்கு விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.
