ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கான ஏர்பஸ் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டதில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் பணச் சலவை தொடர்பான சம்பவம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராக பெயரிடுமாறு சட்டமா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அறிவுறுத்தியுள்ளார்.
குறித்த விமானக் கொள்வனவு ஒப்பந்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இலஞ்சப் பெறுதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வெளிப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2006ஆம் ஆண்டின் 05ஆம் இலக்க பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் 3ஆம் பிரிவின் கீழ் நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராக பெயரிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
