நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான இயந்திரமொன்றை திருடிய குற்றச்சாட்டில் நகரசபை உறுப்பினர்கள் இருவர் கைது

Date:

மீதொட்டமுல்லவில் அமைந்துள்ள நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான களஞ்சியசாலையிலிருந்து இயந்திரமொன்றை திருடிய குற்றச்சாட்டில் கொலன்னாவை நகரசபை உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் 50 மற்றும் 52 வயதுடையவர்கள் என்று போலீஸ் ஊடக பேச்சாளர் பிரதி போலீஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

மேலும், வெல்லம்பிட்டி காவல் நிலையத்தில் கடந்த 11 ஆம் திகதி புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது குறித்த இரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இன்று (16) கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

 

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...